திருப்பூர் நாடளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் 9.3.2014

விடுதலைகளம் [ தொட்டிய நாயக்கர் சமூக முன்னேற்ற அமைப்பு ] திருப்பூர் நாடளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் 9.3.2014 அன்று கோபி செட்டிபாளையத்தில் நடைப் பெற்றது. விடுதலை களம் நிறுவன தலைவர் கொ. நாகராஜன் தலைமை வகித்தார், மாநில துணை தலைவர் வெ.கோபிநாத்,ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.பிரகாசு, மேற்கு மாவட்ட தலைவர் சி.டி.சிதம்பரம், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் சுப்பரமணி, புறநகர் மாவட்ட தலைவர் சின்னசாமி, உட்பட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கிழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. 66 ஆண்டுகளாக தொட்டியநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த கூட்டம் கண்டனத்தை தெரிவிக்கிறது.


2. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலைகளம் அமைப்பு போட்டியிடுவதுயெனவும், தொட்டிய நாயக்கர் சமுகத்தை சார்ந்த ஒருவரை வேட்பாளாராக நிறுத்துவதுயெனவும் தீர்மானிக்கப் பட்டது.


3. 13.03.2014 வேட்பாளர் அறிமுக கூட்டத்தை சென்னையில் நடத்துவதுயெனவும் தீர்மானிக்கப்பட்டது.