விடுதலை களம் சமுக முன்னேற்ற அமைப்பு சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாள் 15,7,2014

விடுதலை களம்




இராஜகம்பள தொட்டிய நாயக்கர்
சமுக முன்னேற்ற அமைப்பு சார்பில்
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாள் 15,7,2014 திங்கட்கிழமை நேரம் காலை 10,00மணி
இடம்சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்

தலைமை : கொ.நாகராஜன்நிறுவன தலைவர்

கோரிக்கைகள்,,,,
தமிழக தலைநகர் சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முழு உருவ சிலை வைக்க கோரியும்,,,
தமிழகம் முழுவதும் தொட்டியநாயக்கர்இராஜகம்பளம்,
கொல்லவார்,சில்லவர்,தோக்லவர்,தொழுவாநாயக்கர்எர்ரகொல்லார் என பெயர்களால் அழைக்கப்படும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கும் தமிழக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தொட்டிய நாயக்கர் சமுகத்திற்கும் என 12 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்ககோரியும்...

இந்திய விடுதலைக்கு தமிழ் மண்ணிலிருந்து முதல் குரல் கொடுத்த சமூக நீதி காத்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல அரசர்களைபாளையக்காரர்களைஜமீன்தாரர்களை உருவாக்கிக் கொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் இந்திய வரலாற்றிலும்தமிழக வீர வரலாற்றிலும்பின்புலமும் பெருமைகளையும் மட்டுமே கொண்டவீரமிக்க தொட்டிய நாயக்கர் சமுதாயம் இன்றைய நிலையில் உழைக்கும் மக்களை மட்டுமே கொண்ட விடுதலை பெற்ற இந்தியாவில் எவ்வித வளர்ச்சியும் காணாத மிக மிக அடித்தட்டு ஒடுக்கப்பட்டநசுக்கப்பட்டவஞ்சிக்கப்பட்டஏமாற்றப்பட்ட அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் தொட்டிய நாயக்கர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசிய தேவையாக உள்ளது.

தனி இட ஒதுக்கீட்டிற்குச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்படும் என்பதால் உடனடி நிவாரணமாக மத்தியமாநில அரசுகள் தொட்டிய நாயக்கர் சமூகத்தைப் பழங்குடி இனப் பட்டியலில் மத்தியமாநில அரசுகளைச் சேர்க்க கோரியும்,

தொட்டிய நாயக்கர் சமூக மக்களுக்கு எனத் தனியாக தமிழக அரசு தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நல வாரியம் அமைக்கக் கோரியும்,,,

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் நாமக்கல்ஈரோடுகோவைசேலம்கரூர்திண்டுக்கல்,திருப்பூர்திருச்சிமதுரைதேனிவிருதுநகர்திருநெல்வேலிதுத்துக்குடிஇராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் தேவையற்ற ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கும் கொடுமை தொடர்ந்து வருவது இந்த தொட்டிய நாயக்கரின் மனதை மிகவும் வேதனைப்படுவதுடன் தமிழக அரசு இந்தப் பிரச்சனையின் மீது சிறப்பு கவனம் செலுத்தி தொட்டிய நாயக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மூன்று நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க கோரியும்,,,

விடுதலை போரில் தமிழ் மண்ணின் வீரத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு இந்திய அரசு சிறப்பு இந்திய குடியுரிமை வழங்க கோரியும்,,,

விடுதலை இந்தியாவில் சட்டமன்றநாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வஞ்சிக்கபட்டு வரும் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு எனத் தனி சட்டமன்றபாராளுமன்ற தொகுதிகளை உருவாக்கிடக் கோரியும்,,,

தமிழகம் முழுவதும் தனி பண்பாடு கலாச்சாரம் வாழ்க்கை முறையினைக் கொண்ட தொட்டிய நாயக்கர் கிராமங்களுக்கு சாலை வசதிகுடிநீர்மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்திடக் கோரியும்,,,
மத்தியமாநில அரசுகளின் பணிகளின் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தக் கோரியும்,,,

வேலை வாய்ப்பில் 90 சதவீதம் தனியார் துறை வசம் உள்ளதுடன் தொட்டிய நாயக்கர் போன்ற ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளகோரியும்,,,

நீதிபதிகள் பணி நியமனத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டடு வருவதால் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டினைப் பின்பற்ற வேண்டும் எனவும்உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமனம் செய்யக் கோரியும்,,,

தமிழகத்தில் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியும்,,

தமிழ்நாடு முழுவதும் தொட்டியநாயக்கர் உட்பிரிவான தொழுவா நாயக்கர்களுக்கு பள்ளிகளிலேயே சாதிச்சான்றிதழ் வழங்ககோரியும்,

அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்

தொடர்புக்கு 9487066643